குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள மோதேரா கிராமத்தில் பிரபலமான சூரியன் கோயில் உள்ளது. இது 1026-27ல் சாளுக்கிய வம்சத்தின் மன்னர் பீமன் என்பவரால் கட்டப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடி குஜராத்தில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க வந்தார்.
மேஹ்சானாவில் உள்ள மோதேராவுக்கு வந்த அவர், அந்த கிராமத்தில் சூரிய ஒளி திட்டத்தை துவக்கி வைத்தார். அப்போது மோதேரா கிராமம் இந்தியாவின் முதல் சூரிய ஒளி கிராமம் என்பதை அறிவித்தார்.
மோதேராவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதன் மூலம், 24 மணி நேரமும் சூரிய ஒளி மின்சாரத்தில் செயல்படும் நாட்டின் முதல் கிராமம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.
0 Comments