மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் சார்பில், மத்திய அரசின் பல்வேறு துறைகள், மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது மத்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, 'டிராய்' 2012ல் ஒரு பரிந்துரை அளித்திருந்தது.
இதில் அரசுகள், தனியார் துறையுடன் கூட்டு முயற்சியில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் அரசுகளால் நிதி அளிக்கப்படும் நிறுவனங்களை, தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையில் ஈடுபட அனுமதிக்கக் கூடாது என குறிப்பிடப்பட்டுஇருந்தது.
மத்திய அரசின் துறைகள், மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள், தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் அது தொடர்பான சேவை வினியோகத்தில் ஈடுபட தடை விதிக்கப்படுகிறது.
இதுவரை அதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருந்தால், வரும் டிச., 31க்குள் அந்த நடவடிக்கையிலிருந்து, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள், தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும்.
ஒளிபரப்பு நடவடிக்கைஏற்கனவே இதுபோன்ற ஒளிபரப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால், இனிமேல் அவை, பிரசார் பார்தியின் கட்டுப்பாட்டில் மட்டுமே இயங்க வேண்டும்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிய சில ஒளிபரப்பு நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் வாயிலாக, பிரசார் பார்தியின் கட்டுப்பாட்டின் கீழ் ஏற்கனவே கொண்டு வரப்பட்டு உள்ளன.
அரசியலமைப்புச் சட்டத்தின் 246-வது பிரிவின்படி, மத்திய அரசு மட்டுமே இதுபோன்ற விஷயங்களில் சட்டம் இயற்ற முடியும்.
0 Comments