Recent Post

6/recent/ticker-posts

உச்சநீதிமன்ற கொலிஜியம் / SUPREME COURT COLLEGIUM

  • உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை, 'கொலிஜியம்' எனப்படும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் குழு பரிந்துரைத்து நியமிக்கும். இந்த நடைமுறை 1998ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. 
  • இந்நிலையில் கொலிஜியம் குழுவில் இருக்கும் 5 நீதிபதிகள் என்ற நடைமுறைக்கு பதிலாக 6 நீதிபதிகள் குழு நடைமுறை முதன்முதலாக அமலுக்கு வரவுள்ளது. இன்றைய நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், கொலிஜியம் குழுவின் தலைவராக உள்ளது. 
  • இவர் அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஓய்வுபெற உள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட், வரும் நவம்பர் 9ம் தேதி பதவியேற்க உள்ளார். 2024ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி ஓய்வுபெறுவார். 
  • நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 பேர் கொண்ட கொலிஜியம் குழுவில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப், எஸ்.ஏ.நசீர், எம்.ஆர்.ஷா ஆகிய நான்கு பேரும் உள்ளனர். 
  • இவர்கள் நான்கு பேரும் டி.ஒய்.சந்திரசூட் ஓய்வு பெறுவதற்கு முன்பே ஓய்வு பெற்றுவிடுவார்கள். இவர்களில் எவரும் உச்சநீதிமன்றத்தின் அடுத்த புதிய தலைமை நீதிபதியாக முடியாது. 
  • அதனால், நீதிபதிகள் நியமன சட்டவிதிகளின்படி கொலிஜியத்தில் இருக்கும் நீதிபதிகளில் ஒருவர் தான், அடுத்த தலைமை நீதிபதியாக முடியும். 
  • அதன்படி நீதிபதி சந்திரசூட்டுக்கு பின்னர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக வருவதற்கு, உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா தகுதி பெறுகிறார். அதனால், அவரே குழுவின் 6வது நீதிபதியாக சேர்க்கப்பட்டுள்ளார். 
  • இவரும் 2024ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதிக்கு பின்னர் தான் அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக முடியும். இவர் தலைமை நீதிபதியாகும் காலத்தில் சீனியாரிட்டி அடிப்படையில் பார்த்தால், கொலிஜியம் குழுவில் நீதிபதி பி.ஆர்.கவாய் இடம்பெறுவார். 
  • இவர் அதற்கடுத்த தலைமை நீதிபதியாக வரவாய்ப்புள்ளது. அந்த காலகட்டத்தில் மீண்டும் கொலிஜியம் குழுவில் தற்போதுள்ள நடைமுறையின்படி 5 நீதிபதிகள் இடம்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel