Recent Post

6/recent/ticker-posts

காவல் நிலையங்களில் அறிமுகமான "GREAT" திட்டம் / TN POLICE GREAT SCHEME

  • பொதுமக்கள் யாரிடம் புகார் மனு அளிப்பது, எப்படி அளிப்பது என்ற சந்தேகம் நாள்தோறும் காவல்நிலையங்களுக்கு வரக்கூடிய சாமனியர்களுக்கு இருந்து கொண்டு தான் இருக்கிறது.
  • இதனை களையும் விதமாகவும் பொதுமக்கள் காத்திருப்பை தவிர்க்கும் விதமாகவும், தமிழகத்திலயே முதன்முறையாக மதுரை மாநகர ஆணையர் அலுவலகத்தில் (Grievance Redressal And Tracking System) GREAT திட்டம் தொடங்கப்பட்டது. இதனை மாநகர காவல் ஆணையர் செந்தில் குமார் தொடங்கிவைத்தார்
  • மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு உட்பட்ட 21காவல்நிலையங்கள் மற்றும் 4 மகளிர் காவல்நிலையங்கள் என 25 காவல் நிலையங்களில் எழுத்தர் அறை பகுதியில் கணிணியுடன் கூடிய வரவேற்பு அறை பகுதி உருவாக்கப்பட்டு அதற்கான வரவேற்பாளரும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
  • இவர்கள் காவல்நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு நபரின் வருகைக்கான காரணம் குறித்த பெயர், தேதி, நேரம், மொபைல் எண், புகார் வகை, ஆதார் எண், காவல்நிலைய அதிகாரி உள்ளிட்டவற்றை வரவேற்பாளரிடம் கூறியவுடன் அதனை GREAT இணைய தளத்தில் பதிவிடப்படும். 
  • இந்த காவல்நிலைய வரவேற்பு அறை முன்பாக 360டிகிரியுடன், ஆடியோ பதிவுடன் கூடிய சிசிடிவி கேமிரா பொறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel