சையத் முஸ்டக் அலி டி20 கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மும்பை இமாச்சல பிரதேச அணிகள் நேற்று மோதின.
இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இமாச்சலப் பிரதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது.
அதனைத் தொடர்ந்து 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதன் மூலம் முதல் முறையாக சையத் முஸ்டக் அலி டி20 கோப்பையை மும்பை அணி கைப்பற்றியுள்ளது.
0 Comments