Recent Post

6/recent/ticker-posts

பிஎஸ்எல்வி சி - 54 ராக்கெட் வெற்றி / PSLV C - 54 ROCKET LAUNCH SUCCESS

  • இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டியே கணித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேவைப்படும் தொலையுணர்வு வகை செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது.
  • அதன்படி, கடல் ஆய்வுப் பணிகளுக்காக 1999, 2009-ல் ஓஷன்சாட்-1, ஓஷன்சாட்-2 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டன. ஓஷன்சாட்-1 செயற்கைக்கோளின் ஆய்வுக்காலம் 2011-ம் ஆண்டுடன் முடிந்துவிட்டது. 
  • ஓஷன்சாட்-2 செயற்கைக் கோளில் சில கருவிகள் பழுதானதால், அதிலிருந்து தகவல்களைப் பெற முடியாத நிலை உள்ளது. எனவே, புவி கண்காணிப்பு, கடலாய்வு செயல்பாடுகளுக்காக, அதிநவீன ஓஷன்சாட்-3 (இஓஎஸ்-06) செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்து, பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டது. 
  • ராக்கெட் ஏவுதலுக்கான 25 மணி 30 நிமிட நேர கவுன்ட்-டவுண் நேற்று முன்தினம் தொடங்கியது.
  • ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் நேற்று காலை 11.56 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. 
  • சரியாக 17 நிமிடத்தில் இஓஎஸ்-06 செயற்கைக்கோளை 742 கி.மீ. தொலைவில், திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.
  • மேலும், 2 மணி நேரத்துக்குப் பிறகு, இதர 8 சிறிய செயற்கைக்கோள்களும், அவற்றின் சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்தப்பட்டன. இஸ்ரோவால் மேற்கொள்ளப்பட்ட மிக நீண்ட ராக்கெட் பயணங்களில் இதுவும் ஒன்றாகும்.
  • முதன்மை செயற்கைக்கோளான இஒஎஸ் 1,117 கிலோ எடை கொண்டது. இதன் மூலம், கடலின் நிறம், மேற்பரப்பு வெப்பநிலை, காற்றின் வேக மாறுபாடு, வளிமண்டலத்தில நிகழும் ஒளியியல் மாற்றங்கள் உள்ளிட்டவற்றைக் கண்காணித்து, தரவுகளைப் பெற முடியும்.
  • இதேபோல, இந்திய-பூடான் கூட்டமைப்பில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ்-2பி, பெங்களூரு பிக்சல் நிறுவனத்தின் ஆனந்த் சாட், ஐதராபாத் துருவா ஸ்பேஸ் நிறுவனத்தின் தைபோல்ட், அமெரிக்காவின் ஸ்பேஸ் ப்ளைட் நிறுவனத்தின் ஆஸ்ட்ரோகாஸ்ட் செயற்கைக்கோள்கள், அறிவியல், தொழில்நுட்ப ஆய்வுகளுக்காக அனுப்பப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel