Recent Post

6/recent/ticker-posts

ராஜஸ்தானில் 'மங்கார் தாம்' தேசிய நினைவுச் சின்னமாக அறிவிப்பு / MANGAR DHAM DECLARED AS NATIONAL MONUMENT IN RAJASTHAN

  • நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்தபோது, ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள மங்கார் என்ற மலைப் பகுதியில் ஏராளமான பழங்குடியினர் வசித்தனர்.
  • இந்த பகுதி தற்போது, குஜராத் - ராஜஸ்தான் மாநிலங்களின் எல்லை பகுதியில் உள்ளது. இங்கு வசித்த பழங்குடியினர் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து வீரத்துடன் போரிட்டு வந்தனர். 
  • கடந்த 1913 நவ., 17ல், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நடத்திய கொடூர தாக்குதலில், 1,500க்கும் மேற்பட்ட பழங்குடியினர் கொல்லப்பட்டனர். இந்த இடத்தில், மங்கார் தாம் என்ற பெயரில் ஒரு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. 
  • இந்நிலையில், இந்த வரலாற்று சம்பவத்தை நினைவு படுத்தும் வகையில் பன்ஸ்வாரா பகுதியில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
  • ராஜஸ்தானில், பிரிட்டிஷ் ஆட்சியின் போது கொல்லப்பட்ட பழங்குடி சமூகத்தினர் நினைவாக அமைக்கப்பட்டுள்ள, 'மங்கார் தாம்' என்ற நினைவிடத்தை தேசிய நினைவுச் சின்னமாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
  • இதில், பிரதமர் மோடி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், அண்டை மாநிலங்களான மத்திய பிரதேசத்தின் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், குஜராத்தின் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel