'ஜி - 2௦' மாநாட்டின் ஒரு அங்கமாக, நிதி மற்றும் மத்திய வங்கி பிரதிநிதிகளின் மூன்று நாட்களுக்கான கூட்டம், பெங்களூரில் துவங்கியது. 'ஜி - 2௦' தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.
இதன் உச்சி மாநாடு, 2023 செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் புதுடில்லியில் நடக்க உள்ளது. இதில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பர்.
இதற்கு முன்னதாக, நாடு முழுதும் 200 ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இதன் ஒரு அங்கமாக, முதலாவது நிதி மற்றும் மத்திய வங்கி பிரதிநிதிகள் கூட்டம், பெங்களூரு, தேவனஹள்ளி அடுத்த நந்திமலை சாலையில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் துவங்கியது.
இந்தியா சார்பில், மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் அஜய் செய்ட், ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் மைக்கேல் பத்ரா ஆகியோர் தலைமை வகித்து பேசினர்.
'ஜி - 2௦' உறுப்பு நாடுகளில் இருந்தும், இந்தியாவால் அழைக்கப்பட்ட பல நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். சர்வதேச அளவில் சந்திக்கும் பல்வேறு விதமான நிதி பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பணவீக்கம், உணவு, எரிசக்தி பாதுகாப்பு, காலநிலை மாற்றம் ஆகியவற்றின் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கு நிதி திரட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
0 Comments