தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் 2022 / NATIONAL SQUASH CHAMPIONSHIP 2022
- சென்னையில், 78வது சீனியர் தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது.
- இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் தமிழகத்தின் ஜோஷ்னா சின்னப்பா 36, டில்லியை சேர்ந்த அனாஹத் சிங் 14, மோதினர்.
- அபாரமாக ஆடிய ஜோஷ்னா 3-0 (11-8, 11-9, 11-9) என்ற கணக்கில் வெற்றி பெற்று, 19வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் தமிழகத்தின் அபய் சிங், வேலவன் செந்தில்குமார் மோதினர். முதல் செட்டை வேலவன் 13-11 எனக் கைப்பற்றினார்.
- பின் எழுச்சி கண்ட அபய் சிங், அடுத்த மூன்று செட்களை 11-7, 11-6, 11-4 என தன்வசப்படுத்தினார்.
- மொத்தம் 48 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் அபய் சிங் 3-1 (11-13, 11-7, 11-6, 11-4) என்ற கணக்கில் வெற்றி பெற்று முதன்முறையாக தேசிய பட்டம் வென்றார்.
0 Comments