உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியையும் சேர்த்து, 34 நீதிபதிகளுக்கான பதவியிடங்கள் உள்ளன; ஏழு இடங்கள் காலியாக இருந்தன.
இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தீபங்கர் தத்தாவை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு, தலைமை நீதிபதி தலைமையிலான, 'கொலீஜியம்' சமீபத்தில் பரிந்துரை செய்திருந்தது.
இதையேற்று, தீபங்கர் தத்தாவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய சட்ட அமைச்சகம் அனுமதி அளித்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் தீபங்கர் தத்தா, பதவியேற்றார்.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். வரும் 2030 பிப்ரவரி வரை, அவர் பதவியில் இருப்பார்.
இதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை, 28 ஆக அதிகரித்துள்ளது.
நீதிபதி தீபங்கர் தத்தா, கோல்கட்டா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சலில் குமார் தத்தாவின் மகன்.
0 Comments