Recent Post

6/recent/ticker-posts

நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் / PM dedicates Nagpur AIIMS Hospital to the nation

  • நாக்பூரில் அமைக்கப்பட்டுள்ள  எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டிற்கு  அர்ப்பணித்தார்.   இதைத்தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனையின் திட்டமாடலையும், மைல்ஸ்டோன் கண்காட்சி கேலரியையும் அவர் பார்வையிட்டார்.
  • நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை தேசத்திற்கு அர்ப்பணித்ததன் மூலம், நாடு முழுவதும் சுகாதார வசதிகளை பலப்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் நிலைப்பாடு செயல்படுத்தப் படுத்தப்பட்டுள்ளது.  
  • பிரதமரின் ஸ்வஸ்த்யா சுரக்ஷா யோஜனாவின் கீழ் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவனைக்கு, கடந்த 2017ம் ஆண்டு, பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
  • ரூ.1,575 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை, மருத்துவத்தின் 30 துறைகளுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாகத்  திகழும். இதில், OPD, IPD கண்டறியும் சேவைகள், அறுவைசிகிச்சைக்கான தியேட்டர்கள் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன. 
  • அதி நவீன மருத்துவ வசதிகளை உள்ளடக்கிய இந்த மருத்துவமனை, மகாராஷ்டிராவின்  விதர்பா பகுதியைச் சேர்ந்த மக்களும், அதனை ஒட்டி அமைந்துள்ள பழங்குடி பகுதிகளான கட்சிரோலி, காண்டியா மற்றும் மெல்காட் மக்களும்  தரமான சிகிச்சை பெறுவதை உறுதி செய்யும்.
  • இந்த நிகழ்ச்சியில் பிரதமருடன், மகாராஷ்டிர முதலமைச்சர் திரு. ஏக்நாத் ஷிண்டே, அம்மாநில ஆளுநர் திரு. பகத்சிங் கோஷ்யாரி, துணை முதலமைச்சர் திரு. தேவேந்திர பட்னவிஸ், மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel