ராணுவத்தினருக்கான, ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம் திட்டத்தை மத்திய அரசு 2015ல் அறிவித்தது. 'இத்திட்டத்தின் கீழ், ஓய்வூதியம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படும்' என அறிவிக்கப்பட்டது.
ஆனால், 'இதை ஆண்டுதோறும் மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும் என முன்னாள் வீரர்கள் இயக்கம் சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை விடப்பட்டது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 2019 ஜூலை 1 முதல் மேற்கொள்ளவாக உறுதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து மாற்றியமைக்க திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தினால் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மாஜி வீரர்கள் பயனடைவர் என கூறப்படுகிறது.
0 Comments