Recent Post

6/recent/ticker-posts

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சுமார் ரூ. 38,800 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் / In Mumbai, Maharashtra, about Rs. Prime Minister laid foundation stones for various development projects worth Rs 38,800 crore and dedicated the completed projects to the country

  • பிரதமர் திரு நரேந்திர மோடி மும்பையில் பல வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். 
  • பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளின் அங்கீகரிக்கப்பட்ட கடன்களை பிரதமர் விடுவித்தார். 
  • மும்பை மெட்ரோ ரயில் பாதைகள் 2ஏ & 7-ஐ நாட்டுக்கு அர்ப்பணித்தல், சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம், ஏழு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மறுசீரமைப்பதற்காக அடிக்கல் நாட்டுதல், 20 இந்துஹ்ருதய்சாம்ராட் பாலாசாஹேப் தாக்கரே தெருவோர உணவு கடைகளைத் துவக்குதல், மும்பை நகரில் 40 கிலோமீட்டர் சாலையை கான்கிரீட் சாலையாக்கும் திட்டத்தைத் தொடங்குதல் ஆகியவை இதில் அடங்கும்.
  • பிரதமர் நரேந்திர மோடி மும்பையில் 38,800 கோடி ரூபாய் அளவிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டில் முடிவற்ற பணிகளை தொடங்கி வைத்தார். தடையற்ற நகர்ப்புற போக்குவரத்து சூழல் பிரதமரின் முக்கிய திட்டங்களில் ஒன்றாகும். 
  • இதன்படி 1200 கோடி ரூபாய் அளவிலான மெட்ரோ ரயில் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். 18.6 கி.மீ. நீளம் கொண்ட 2ஏ (மஞ்சள் தடம்) தஹிசார் - தாதர் நகர் இடையேயும், 16.5 கி.மீ. நீளம் கொண்ட தடம் 7 (சிவப்பு தடம்) அந்தேரி இ- தஹிசார் இ இடையே அமைக்கப்பட்டு உள்ளது. 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel