வரும் 2024ம் ஆண்டுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் 'ரோஜ்கர் மேளா' திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கி வைத்து, 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, கடந்த நவம்பரில் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. தற்போது 3வது கட்டமாக ரோஜ்கர் மேளாவில் மேலும் 71,426 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. காணொலி வாயிலாக நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார்.
0 Comments