நாடாளுமன்றத்தின் முதல்கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். ஜனாதிபதியாக முர்மு பதவியேற்ற பிறகு நாடாளுமன்றத்தில் ஆற்றும் முதல் உரை இது.
வரும் 2047ம் ஆண்டிற்குள் இந்தியாவை தற்சார்பு கொண்ட நாடாக உருவாக்க மக்கள் அனைவரும் உழைக்க வேண்டும்' என ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடாளுமன்ற பட்ஜெட் தொடரை தொடங்கி வைத்து, கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
0 Comments