• குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழக பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் புத்தொழில் நிதித் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
  • தமிழக நிதித் துறை சார்பில் வளர்ந்து வரும் துறைகளுக்கானதொடக்க நிதியத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்து, முதல்கட்டமாக 5 நிறுவனங்களுக்கு முதலீட்டு அனுமதிக் கடிதங்களை வழங்கினார்.
  • இதன்மூலம், பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவுகளைச் சார்ந்த தொழில் முனைவோரால் தொடங்கி, நடத்தப்பட்டு வரும் புத்தொழில் நிறுவனங்களுக்கு பங்கு முதலீடாக அல்லது பிணையில்லா கடனாக நிதி வழங்கப்படும். இந்நிதியத்துக்கு முதற்கட்டமாக ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.