பிரதமர் திரு. நரேந்திர மோடி 41 வது பிரகதி கூட்டத்திற்கு இன்று தலைமை வகித்து திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.
முனைப்பான நிர்வாகம் மற்றும் குறித்த காலத்தில் அமலாக்கம் செய்தல் என்ற தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான பன்னோக்குத் தளமான பிரகதியில் திட்டங்கள் குறித்து பிரதமர் ஆய்வு மேற்கொண்டார்.
13 மாநிலங்களில் மேற்கொற்ள்ளப்பட்டு வரும் ரூ.41,500 கோடி மதிப்பிலான 9 முக்கியமான உட்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்து பிரதமர் ஆய்வு செய்தார்.
சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் 3 திட்டங்கள், ரயில்வே அமைச்சகத்தின் 2 திட்டங்கள், மின்சாரம், நிலக்கரி, பெட்ரோலியம், சுகாதாரம் ஆகிய அமைச்சகங்கள் சார்பில் தலா ஒரு திட்டம் ஆகியவைக் குறித்து பிரதமர் ஆய்வு மேற்கொண்டார். இந்தத் திட்டங்கள் தமிழ்நாடு, பஞ்சாப், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுவரை நடைபெற்ற பிரகதி கூட்டங்களில் ரூ.15.82 லட்சம் மதிப்பிலான 328 திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
0 Comments