உலக வங்கியின் தலைவராக இந்திய வம்சாவளி அஜய் பங்கா நியமிக்கப்படுவதாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் வியாழக்கிழமை அறிவித்தாா்.
அஜய் பங்காவின் நியமனத்தை உலக வங்கியின் இயக்குநா்கள் உறுதி செய்யும்பட்சத்தில், உலக வங்கிக்குத் தலைமை பொறுப்பை ஏற்கும் முதல் இந்திய வம்சாவளி, சீக்கியா் என்ற பெருமையை அஜய் பாங்கா பெறுவாா்.
63 வயதாகும் அஜய் பங்கா தற்போது ஜெனரல் அட்லாண்டிக் நிதி நிறுவனத்தின் துணைத் தலைவராக உள்ளாா்.
0 Comments