Recent Post

6/recent/ticker-posts

உலக கோப்பை துப்பாக்கிசுடுதலில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பிரதாப் சிங் தோமர் / India's Pratap Singh Tomar Wins Gold in Shooting World Cup /

  • எகிப்து தலைநகர் கெய்ரோவில் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் நடந்து வருகிறது. இதில் l நடந்த ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) போட்டியின் இறுதி சுற்றில் இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 16-6 என்ற புள்ளி கணக்கில் ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர் ஸ்கிமியை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். 
  • மத்தியபிரதேசத்தை சேர்ந்த 22 வயதான ஐஸ்வரி பிரதாப் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியிலும் தங்கம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்த உலக கோப்பை தொடரில், இந்தியா வென்ற 4-வது தங்கப்பதக்கம் இதுவாகும். இந்த தொடரில் இந்தியா 4 தங்கப்பதக்கம், 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. 
  • இரட்டை பிரிவு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் நர்மதா-ருத்ராங்ஷ் ஏர் ரைபிள் பிரிவில் தங்கமும், ரிதம்-வருண் தோமர் இணை ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கமும் வென்று அசத்தினர். 
  • தொடர்ந்து, ஆடவர் தனிநபர் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் நடப்பு உலக சாம்பியனான ருத்ராங்க்ஷ் பாட்டீல் தங்கப் பதக்கம் வென்றார்.
  • 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் இந்தியாவின் வருண் தோமர் வெண்கலம் வென்றார்.
  • 10 மீட்டர் மகளிர் ஏர் ரைபிள் பிரிவுக்கான போட்டியில் இந்திய வீராங்கனை திலோத்தமா சென் வெண்கலப்பதக்கம் வென்றார்

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel