Recent Post

6/recent/ticker-posts

தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களின் சுகாதாரத்தை மேம்படுத்த திட்டம்: ரூ.8,200 கோடி அளிக்கிறது உலக வங்கி / Plan to improve health in 7 states including Tamil Nadu: World Bank provides Rs.8,200 crores

  • கொரோனா பெருந்தொற்று பரவலுக்குப் பின், நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், மருத்துவ அவசரநிலையை எதிர்கொள்ள தேவையான வசதிகளை மேம்படுத்தவும், மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 
  • இதற்காகவே, பிரதமர் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கட்டமைப்பு திட்டத்தை 2021 அக்., மாதம் மத்திய அரசு துவங்கியது. இத்திட்டத்தின் வாயிலாக, நாட்டின் மருத்துவ உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது.
  • இந்நிலையில், இத்திட்டத்திற்கு, 8,200 கோடி ரூபாய் கடன் அளிக்க உலக வங்கி முன்வந்து உள்ளது. இதற்கான கடன் ஒப்பந்தம் இருதரப்புக்கும் இடையே கையெழுத்தானது. 
  • மத்திய அரசு தரப்பில், பொருளாதார விவகாரத்துறை கூடுதல் செயலர் ரஜத்குமார் மிஸ்ராவும், உலக வங்கி தரப்பில் வங்கியின் இந்தியப்பிரிவு இயக்குனர் ஆகஸ்டி டானோ கோமேவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
  • இந்த கடன் தொகை வாயிலாக, தமிழகம், ஆந்திரா, கேரளா, மேகாலயா, ஒடிசா, பஞ்சாப், உத்தர பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel