இந்திய விமானப்படை வரலாற்றில் போர் பிரிவுக்கு தலைமை தாங்கிய முதல் பெண் ஷாலிசா தாமி / Shalisa Thami is the first woman to head a fighter wing in the history of the Indian Air Force /
உலகின் முன்னணி விமானப்படைகளில் ஒன்றாக இருக்கும் இந்திய விமானப் படையின் போர் பிரிவில் இதுவரை எந்தவொரு பெண்ணும் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டதில்லை.
அந்த வரலாற்றை மாற்றியமைக்கும் விதமாக முதன்முறையாக இந்திய விமானப் படையின் போர் பிரிவில் தலைமைப் பொறுப்பில் ஷாலிசா தாமி நியமிக்கப்பட்டிருக்கிறார். தற்போது இந்திய விமானப் படையில் விங் கமாண்டர் பொறுப்பில் இருக்கிறார் அவர்.
அவர் மேற்கத்திய செக்டாரில் முன்னணி போர் பிரிவின் தலைமை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் அவர். இந்த மாத தொடக்கத்தில், ராணுவம் மருத்துவப் பிரிவுக்கு வெளியே முதல் முறையாக பெண் அதிகாரிகளை கட்டளைப் பணிகளுக்கு நியமிக்கத் தொடங்கியது.
அவர்களில் சுமார் 50 பேர் செயல்பாட்டு பகுதிகளில் பிரிவுகளுக்கு தலைமை தாங்குவார்கள். இது வடக்கு மற்றும் கிழக்கு கட்டளை பகுதிகளில் அவர்களின் செயல்பாடுகள் இருக்கும்.
0 Comments