Recent Post

6/recent/ticker-posts

தமிழ்நாடு வனத்துறை அமைச்சகத்தின் முக்கிய 7 அறிவிப்புகள் / Top 7 Notifications of Tamilnadu Forest Ministry

  • தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 -2024-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த மார்ச் 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
  • பின்னர் அடுத்த நாள் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது.
  • இதைத்தொடர்ந்து தற்போது இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் வனத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சரான மதிவேந்தன் 7 புதிய முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
  • திண்டுக்கல் வனக்கோட்டம் அய்யலூரில் தேவாங்கு பாதுகாப்பு மையம் 20.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • தஞ்சாவூர் மாவட்டம் மனோராவில் கடற்பசு பாதுகாப்பு மையம் 15.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • பள்ளிக்கரணை பாதுகாப்பு மையம் 20.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • ராம்சார் தளம் - வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகள் 9.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
  • ராம்சார் தளம் - கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகள் 6.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
  • பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகள் 3.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
  • அரியலூர் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் 1.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel