Recent Post

6/recent/ticker-posts

கேரளாவின் மீடியா ஒன் செய்தி சேனல் மீதான தடை ரத்து - உச்ச நீதிமன்ற தீர்ப்பு / Ban on Kerala's Media One news channel lifted - Supreme Court verdict

  • மீடியா ஒன் செய்திச் சேனல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. 
  • அப்போது நீதிபதிகள் கூறியதாவது: அரசின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து மீடியா ஒன் சேனல் விமர்சித்ததை தேச விரோதம் என்று கருதிவிட முடியாது. துடிப்பான ஜனநாயகத்துக்கு பத்திரிகை சுதந்திரம் என்பது மிகவும் அவசியமான ஒன்று.
  • பாதுகாப்பு அனுமதி இல்லாததால் மீடியா ஒன் சேனலின் ஒளிபரப்பு உரிமத்தை புதுப்பிக்க மறுத்த தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
  • தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் உரிமைகளை மறுக்க முடியாது. இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் அக்கறையற்ற வகையில் செயல்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசின் முடிவை ஏற்றுக்கொண்டு கேரள நீதிமன்றத்தின் வழங்கிய தீர்ப்பு நிராகரிக்கப்படுகிறது.
  • மீடியா ஒன் மீதான ஒளிபரப்புத்தடை விதிக்கும் முடிவை நியாயப் படுத்துவதற்கு தேவையான எந்தவொரு உண்மையான ஆதாரங்களையும் மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை.
  • அரசு நடவடிக்கைகளை பத்திரிகைகள் ஆதரிக்க வேண்டும் என்ற ஆளும் அரசின் நிலைப்பாட்டை அனுமதிக்க முடியாது. அரசாங்கத்தை விமர்சித்தது மட்டுமே ஒரு தொலைக்காட்சி சேனலின் உரிமைத்தை ரத்து செய்வதற்கான காரணமாக இருக்க முடியாது.
  • சீலிடப்பட்ட கவரில் மத்திய அரசு தாக்கல் செய்யும் அறிக்கைஇயற்கை நீதி மற்றும் வெளிப்படையான நீதியின் கொள்கைகளை மீறும் வகையில் அமைந்துள்ளது.
  • நீதிமன்ற விசாரணையில் எதிர் தரப்பினருக்கு தகவல்களை வெளியிடுவதில் அரசு மூடிமறைத்து செயல்பட இதனை கருவியாக பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. 
  • அனைத்து விசாரணை அறிக்கைகளையும் ரகசியம் என்று கூறி புறந்தள்ளமுடியாது. ஏனெனில், அவை குடிமக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை பாதிக்கின்றன. இவ்வாறு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel