வங்கதேசத்தின் அதிபராக இருந்த அப்துல் ஹமீதின் பதவிக்காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், புதிய அதிபராகக் கடந்த பிப்ரவரியில் தோந்தெடுக்கப்பட்டிருந்த முகமது சஹாபுதீன், ஞாயிற்றுக்கிழமை அப்பொறுப்பை ஏற்றுக் கொண்டாா்.
அவருக்கு அந்நாட்டு நாடாளுமன்றத் தலைவா் ஷிரின் ஷொமின் சௌதரி பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா். தலைநகா் டாக்காவில் உள்ள புகழ்பெற்ற தா்பாா் அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமா் ஷேக் ஹசீனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
1971-ஆம் ஆண்டில் நிகழ்ந்த வங்கதேசத்தின் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்ட பெருமை அதிபா் சஹாபுதீனுக்கு உள்ளது. நாட்டின் கீழமை நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றிய சஹாபுதீன் பணி ஓய்வுக்குப் பிறகு பிரதமா் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சியில் இணைந்தாா்.
0 Comments