Recent Post

6/recent/ticker-posts

TNEB மின்வாரிய காலிப்பணியிடம் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் - அரசாணை வெளியீடு


தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை வெளியிட்டுள்ள அரசாணை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் 107வது வாரிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், 400 உதவி எலக்ட்ரிக்கல் இன்ஜினியர், 50 உதவி மெக்கானிக்கல் இன்ஜினியர், 60 உதவி சிவில் இன்ஜினியர், 600 எலக்ட்ரிக்கல் தொழில்நுட்ப உதவியாளர், 300 இளநிலை உதவியாளர், 8 ஆயிரம் கள உதவியாளர் என மொத்தம் 10 ஆயிரத்து 260 காலி பணி இடங்களை நிரப்ப அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

அரசு கவனமாக பரிசீலித்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணைகளின்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 10,260 இடங்களில் 200 தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை முதற்கட்டமாக நிரப்ப ஒப்புதல் அளித்து உத்தரவிட்டு இருக்கிறது. 

அதன்படி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய சட்டம் 2022 மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளின்படி, 200 தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி.யை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உடனடியாக அணுகும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel