சிந்தன் சிபிர் நிகழ்வின் இறுதியில் 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் / Union Minister Sarbananda Sonowal made 5 important announcements at the end of the Sindan Sibir event
கேரளாவின் மூணாறில் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை சார்பில் நடைபெற்ற இரண்டாவது சிந்தன் சிபிர் கூட்டத்தின் முடிவில் மத்திய அமைச்சர் திரு. சர்பானந்தா சோனோவால் பசுமைக் கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுகங்களின் டிஜிட்டல் மயமாக்கலை மையமாகக் கொண்ட ஐந்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
பசுமைக் கப்பல் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு 30% நிதி உதவி வழங்குவது; பசுமை இழுவை மாற்றும் திட்டத்தின் கீழ் ஜவஹர்லால் நேரு துறைமுகம், வ.உ. சிதம்பரனார் துறைமுகம், பாரதீப் துறைமுகம் மற்றும் தீனதயாள் துறைமுகம், காண்ட்லா துறைமுகம் ஆகியவை தலா இரண்டு இழுவைக் கப்பல்களை வாங்கும். தீனதயாள் துறைமுகம், தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் ஆகியவை பசுமை ஹைட்ரஜன் மையமாக உருவாக்கப்படும்; ஆறு மற்றும் கடல் பயணங்களை எளிதாக்கவும் கண்காணிக்கவும் ஒற்றை சாளர தளத்தை உருவாக்குவது; ஜவஹர்லால் நேரு துறைமுகம் மற்றும் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகங்களை அடுத்த ஆண்டுக்குள் ஸ்மார்ட் துறைமுகமாக மாற்றுவது ஆகிய 5 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன
0 Comments