பிரதமரின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர் பின்வரும் மத்திய அமைச்சர்களின் துறைகளை மாற்றியமைத்து உத்தரவிட்டுள்ளார். புவி அறிவியல் அமைச்சக இலாகா திரு கிரண் ரிஜிஜூவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
திரு கிரண் ரிஜிஜூவுக்கு பதிலாக, இணையமைச்சர் திரு அர்ஜூன் ராம் மேஹ்வாலுக்கு சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் இலாகா தனிப்பொறுப்பாக வழங்கப்படுகிறது. ஏற்கனவே வகிக்கும் இலாகாக்களுடன் திரு மேஹ்வால் இதனை கூடுதலாக வகிப்பார்.
0 Comments