Recent Post

6/recent/ticker-posts

மாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து சேவை தொடக்கம் / Commencement of cargo shipping service to Maldives

  • மத்திய கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் ஸ்ரீ சாந்தனு தாக்கூர் தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்தார்.
  • தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து மாலத்தீவுக்கு எம்எஸ்எஸ் கெலினா (MSS GALENA) என்ற கப்பல், கட்டுமானம் மற்றும் ஜவுளிப் பொருட்களைக் கொண்ட 270 கண்டெய்னர்களுடன் புறப்பட்டுச் சென்றது. இரு நாடுகளின் உறவுகள் மேம்படுவதற்கு இந்த கப்பல் சேவை உதவும்.
  • இந்த கப்பலானது மாதத்திற்கு மூன்று முறை இயக்கப்படவுள்ளது. இந்த கப்பல் 421 சரக்கு பெட்டகங்கள் மற்றும் மொத்த சரக்குகளை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது. 
  • வெள்ளிக்கிழமை புறப்பட்ட சரக்கு கப்பல், ஞாயிற்றுக்கிழமை மாலத்தீவில் உள்ள மாலே துறைமுகத்தைச் சென்றடையும். இந்திய கப்பல் கழகத்தால் இந்த சரக்கு கப்பல் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel