ஜப்பானில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி / Prime Minister Narendra Modi unveiled a bust of Mahatma Gandhi in Japan
கிழக்காசிய நாடான ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரில், 'ஜி - 7' நாடுகளின் மாநாடு துவங்கியது. மூன்று நாட்கள் நடக்கும் இக்கூட்டத்தில், இதன் உறுப்பு நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன், கனடா, ஜப்பான், அமெரிக்கா நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றுள்ளார்.
இதற்கான நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி, ஹிரோஷிமா நகரில் முதல் உலகப் போரின் போது அணுகுண்டு வீசப்பட்ட பகுதி யில் நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார்.
பின், காந்தியின் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தி அவர் வணங்கினார். அப்போது பேசிய பிரதமர், ''இங்கு நிறுவப்பட்டுள்ள இந்த சிலை, உலகை அமைதி பாதைக்கு அழைத்துச் செல்லும்,'' என தெரிவித்தார்.
0 Comments