நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசன்டா (Pushpa Kamal Dahal Prachanda) 4 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்த அவர், பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகள் பற்றி விவாதித்தார்.
தொடர்ந்து, இரு நாட்டு பிரதமர்களும் இணைந்து, உத்தரப் பிரதேசத்தின் ரூபைதிகா மற்றும் நேபாளத்தின் நேபாள்கன்ஜ் இடையே, சர்வதேச எல்லையில் சரக்கு மற்றும் பயணிகள் வாகன வசதிக்காக ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகளை காணொலி மூலம் திறந்து வைத்தனர். அதேபோல், பீகாரின் பத்னாகா மற்றும் நேபாளம் இடையே சரக்கு ரயில் போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்தனர்.
0 Comments