அணு ஆயுதங்களைச் தாங்கிச் செல்லும் நவீன, 'அக்னி பிரைம்' ஏவுகணையை ஒடிசா கடற்கரைக்கு அப்பால் இருக்கும் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் தீவிலிருந்து, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (DRDO) இரவு வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது.
'ஏற்கெனவே மூன்று முறை சோதனை அடிப்படையில் செலுத்தப்பட்ட இதுபோன்ற ஏவுகணைகளின் துல்லியம் மற்றும் செயல்முறையின் நம்பகத் தன்மை ஆகியவை உறுதி செய்யப்படுவதற்கு, ராணுவத்தில் சேர்க்கப்படுவதற்கு முன்பு, முதன் முறையாக இந்த இரவு நேரப் பரிசோதனை நடத்தப்பட்டு இருக்கிறது.
இந்த ஏவுகணையின் செலுத்து பாதை முழுவதும் பல்வேறு இடங்களில் ராடார், டெலிமெட்ரிக், மின்னணு கண்ணாடி இழை கண்காணிப்பு செயல்முறை போன்றவை அமைக்கப்பட்டு இருந்தன.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் மூத்த அதிகாரிகள், பாதுகாப்புப் படைகளின் தளபதிகள் ஆகியோர் இந்த வெற்றிகரமான அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணை சோதனையைப் பார்வையிட்டு உள்ளனர்.
0 Comments