உலகின் பல்வேறு நாடுகளிலும் இருந்து ரகசியத் தகவல்களை திரட்டி, நம் நாட்டிற்கு எதிரான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை தடுக்கும் நோக்கில் ரா உளவு அமைப்பு செயல்பட்டு வருகிறது.
தற்போது, இதன் தலைவராக பதவி வகித்து வரும் சமந்த் குமார் கோயலின் பதவிக்காலம் வரும் 30ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
இதையடுத்து, புதிய தலைவராக, 1988ம் ஆண்டின் சத்தீஸ்கர் கேடர் ஐ.பி.எஸ்., அதிகாரியான ரவி சின்ஹாவை, 59, நியமித்து நியமனங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கி உள்ளது.
ரா உளவு அமைப்பில் 20 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் வாய்ந்த இவர், தற்போது செயல் பிரிவு தலைவராக பதவி வகித்து வருகிறார்.இந்நிலையில், இந்த அமைப்பின் தலைவராக அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இருப்பார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
0 Comments