பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாடப்படும் நிலையில் அந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
முன்னதாக பிரான்ஸ் நாட்டின் மிகவும் உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இந்த விருதை வழங்கினார். இதன்மூலம் கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் விருதை பெற்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றார்.
இந்த கிராண்ட் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் என்பது பிரான்ஸ் நாட்டின் சார்பில் ராணுவம் மற்றும் உயர்ந்த பதவிகளில் உள்ள அரசியல் தலைவர்களுக்கு வழங்கும் உயரிய விருதாகும். இதற்கு முன்பு இந்த விருதை தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா, மாஜி வேல்ஸ் இளவரசர் சார்லஸ், ஜெர்மனியின் முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் பூட்ரோஸ் பூட்ரோஸ்-காலி உள்ளிட்டவர்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments