• உலகின் மிகப் பெரிய ராணுவங்களில் ஒன்றாக இந்திய பாதுகாப்புப் படைகள் இருக்கிறது. பாதுகாப்புப் படைகளை மேலும் வலுப்படுத்த மத்திய அரசு தொடர்ச்சியாகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொடர்ச்சியாக புது ஆயுதங்களையும் கொள்முதல் செய்து வருகிறது.
  • அதன்படி இப்போது சுமார் ₹45,000 கோடி மதிப்பிலான ஒன்பது கொள்முதல் திட்டங்களுக்குப் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 
  • அதன்படி இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தயாரித்த 12 சுகோய் 30 MKI போர் விமானங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 11,000 கோடி ரூபாய் மதிப்பில் விமானங்கள் மற்றும் அது சார்ந்த கிரவுண்டு திட்டங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.