Recent Post

6/recent/ticker-posts

13 மாவட்டங்களில் இலங்கை தமிழர்களுக்கு 1,591 வீடுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின் / Chief Minister Stalin provided 1,591 houses to Sri Lankan Tamils in 13 districts

  • தமிழகத்தின் 29 மாவட்டங்களில் உள்ள 104 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்த 7,469 வீடுகள் புதிதாக கட்டித்தரப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021-ல் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
  • இந்த திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக ரூ.176.02 கோடி மதிப்பில் மொத்தம் 3,510 வீடுகள் கட்டும் பணியை முதல்வர் ஸ்டாலின் 2021 நவ.2-ல் வேலூர் அருகே மேல்மொணவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தொடங்கி வைத்தார்.
  • இந்நிலையில், 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர்முகாம்களில் மொத்தம் ரூ.79.70 கோடி மதிப்பில் 1,591 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும், முகாம்களில் ரூ.11.33 கோடி மதிப்பில் இதர அடிப்படை வசதிகளும் செய்துதரப்பட்டுள்ளன.
  • இதையடுத்து, தமிழகம் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கான 1,591 குடியிருப்புகள் திறப்பு விழாவேலூர் அருகேயுள்ள மேல்மொணவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நேற்று நடைபெற்றது. 
  • இதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று 12 மாவட்டங்களில் கட்டியுள்ள குடியிருப்புகளை காணொலி வாயிலாகவும் வேலூர் முகாமில் நேரடியாகவும் திறந்து வைத்து பயனாளிகள் வசம் வீடுகளை ஒப்படைத்தார்.
  • பயனாளிகளுக்கு வீட்டு உபயோக பொருட்களையும் இனிப்புகளையும் வழங்கினார். பின்னர், புதிய குடியிருப்புகள் குறித்து இலங்கை தமிழர்களுடன் காணொலி வழியாக கலந்துரையாடினார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel