விழுப்புரம் மாவட்டத்தில், 108 ஆம்புலன்ஸ் உதவியாளர், டிரைவர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் 4ம் தேதி நடக்கிறது. விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில், வரும் 4ம் தேதி காலை 9:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை நேர்முக தேர்வு நடக்கிறது.
இதில், மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணிக்கான விண்ணப்பதாரர்கள் பங்கேற்கலாம். டிரைவர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 24 வயதுக்கு மேல் 35 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் பேட்ஜ் பெற்றிருக்க வேண்டும்.
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், எழுத்துத் தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனிதவள துறை நேர்காணல், கண் பார்வை மற்றும் மருத்துவம் தொடர்பான தேர்வு மற்றும் சாலை விதிகளுக்கான தேர்வில் பங்கேற்க வேண்டும். இதில், தேர்வு செய்யப்படுவோருக்கு, 10 நாட்கள் வகுப்பறை பயிற்சி அளிக்கப்படும்.
மாத ஊதியமாக 15 ஆயிரத்து 235 ரூபாய் வழங்கப்படும். மருத்துவ உதவியாளர் பணிக்கு, பி.எஸ்சி., நர்சிங், செவிலியர் டிப்ளமோ படிப்பு மற்றும் பி.எஸ்சி., அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த பணிக்கு, எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முகம், உடற்கூறியல் முதலுதவி அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை மற்றும் மனித வளத்துறையின் நேர்முக தேர்வு நடைபெறும். தேர்வு செய்யப்படுவோருக்கு, 50 நாட்கள் வகுப்பறை பயிற்சி, மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சிகளும் அளிக்கப்படும்.
மேலும், விபரம் அறிய 044-28888060, 28888075, 28888077 ஆகிய தொலைபேசி எண்களில், தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 Comments