Recent Post

6/recent/ticker-posts

சுமார் 51,000 பேருக்கு பிரதமர் மோடி பணி நியமனக் கடிதம் வழங்கினார் / PM Modi issued appointment letters to around 51,000 people

சுமார் 51,000 பேருக்கு பிரதமர் மோடி பணி நியமனக் கடிதம் வழங்கினார் / PM Modi issued appointment letters to around 51,000 people

பிரதமர் திரு. நரேந்திர மோடி வேலைவாய்ப்பு விழாவில் உரையாற்றினார். புதிதாக பணியில் சேர்ந்த சுமார் 51,000 பேருக்கு நியமனக் கடிதங்களை காணொலிக் காட்சி மூலம் வழங்கினார்.

நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வருவாய்த் துறை, உள்துறை அமைச்சகம், உயர் கல்வித் துறை, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, நிதி சேவைகள் துறை, பாதுகாப்பு அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் அரசுப் பணிகளில் சேருவார்கள்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான அரசின் பிரச்சாரம் தொடர்ந்து முன்னோக்கிச் செல்வதாகக் கூறிய பிரதமர், இன்று நாடு முழுவதும் 50,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசு வேலைகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel