ஜூன் 25ம் தேதி இனி அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்கப்படும் - மத்திய அரசு / 25th June will henceforth be observed as Constitution Massacre Day - Central Govt

கடந்த 1975ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஜூன் 25ம் தேதியில் எமர்ஜென்சியை அமல்படுத்தியிருந்தார். சுதந்திர இந்தியா வரலாற்றில் எமெர்ஜென்சி என்பது ஒரு கருப்பு நாள் என இன்று வரை எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இந்த தினத்தை அரசியல் சாசன படுகொலை தினமாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதன்படி இனி வரும் ஆண்டுகளில் ஜூன் மாதம் 25ம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.