525 கோடி ரூபாயில் மதிப்பில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் முதல்வர் மு. க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் / Chief Minister M. K. Stalin laid the foundation stone of the Kalaignar International Arena worth Rs. 525 crore

சென்னை அருகே முட்டுக்காடு பகுதியில், கலைஞர் பன்னாட்டு அரங்கத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா மே 29ஆம் தேதி நடைபெற்றது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 37.99 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில், 525 கோடி ரூபாயில் இந்த உலகத் தரம் வாய்ந்த அரங்கம் அமைக்கப்படுகிறது.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்த அரங்கம், 5.12 லட்சம் சதுர அடியில், 10,000 பேர் ஒரே நேரத்தில் பார்வையிடும் கண்காட்சி அரங்கம், 5,000 பேர் அமரக்கூடிய கூட்ட அரங்கம், சிற்றரங்குகள், திறந்தவெளி மேடைகள், உணவகம் மற்றும் 10,000 வாகனங்களுக்கு பார்க்கிங் வசதியுடன் கட்டப்பட உள்ளது.

இந்த அரங்கம், தொழில்நுட்பக் கூட்டங்கள், உலக வர்த்தக மாநாடுகள், திரைப்பட விழாக்கள், பன்னாட்டு நிகழ்ச்சிகளுக்கு திரட்டுப்பெறும் இடமாக அமையும். கட்டுமான பணிகளை 18 மாதத்தில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான பணிகள் தற்போது 30 ஏக்கரில் தொடங்கியுள்ளன.