ஜகார்த்தாவில் நடைபெறும் 67வது நிர்வாகக் குழுக் கூட்டத்தில் ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டது / India assumes chairmanship of Asian Productivity Organization at 67th Executive Board Meeting in Jakarta

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் மே 20–22, 2025 அன்று நடைபெறும் ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (ஏபிஓ) நிர்வாகக் குழுவின் பொதுக்குழுக் கூட்டத்தின் 67வது அமர்வின் போது, 2025–26 காலத்திற்கான ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின்(ஏ.பி.ஓ.) தலைமைப் பொறுப்பை இந்தியா முறையாக ஏற்றுக்கொண்டது. 

இந்தியக் குழுவிற்கு தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (டிபிஐஐடி) செயலாளர் மற்றும் இந்தியாவுக்கான ஏபிஓ இயக்குநர் ஸ்ரீ அமர்தீப் சிங் பாட்டியா ஆகியோர் தலைமை தாங்குகின்றனர்.