ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி, பிவிஎஸ்எம் ஏவிஎஸ்எம் விஎம், இந்திய விமானப்படை பணியாளர்களின் துணைத் தளபதியாக 2025, மே 02 அன்று பொறுப்பேற்றார்.
ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி, டேராடூனில் உள்ள இந்திய தேசிய ராணுவக் கல்லூரியில் தனது பள்ளிப் படிப்பை முடித்து, கடக்வாசலாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர்ந்தார்.
விமானப்படையின் துணைத் தளபதியாக பொறுப்பேற்பதற்கு முன், தென்மேற்கு விமானப்படை காமாண்டில் கமாண்டிங்-இன்-சீஃப் ஆக இருந்தார்.
இவரது சிறப்பான சேவையைப் பாராட்டி, 2025-ம் ஆண்டு பரம் விஷிஷ்ட் சேவா பதக்கம் (பிவிஎஸ்எம்), 2022-ம் ஆண்டு அதி விஷிஷ்ட் சேவா பதக்கம் (ஏவிஎஸ்எம்) 2008-ம் ஆண்டு வாயு சேனா பதக்கம் (விஎம்) ஆகிய குடியரசுத்தலைவர் விருதுகள் வழங்கப்பட்டன.
0 Comments