இந்திய கடற்படை தங்களது ஆயுத சோதனைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான டி.ஆர்.டி.ஒ. மற்றும் இந்திய கடற்படை இணைந்து உருவாக்கிய எம்.ஐ.ஜி.எம். என்ற சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஆயுதத்தை சோதனை செய்து வெற்றி கண்டுள்ளார்கள்.
இந்த சோதனை விசாகப்பட்டினத்தில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. எம்.ஐ.ஜி.எம். குறைந்த அளவிலான வெடிபொருளுடன் கடலுக்கடியில் சோதனை செய்யப்பட்டது.
இது கடலுக்கு அடியில் வெடிக்கும் கண்ணிவெடி தாக்குதல் ஆகும். மேலும் எதிரி நாட்டின் அதிநவீன போர் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை குறிவைத்து தாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
0 Comments