Recent Post

6/recent/ticker-posts

ஜார்க்கண்ட், கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஏழு மாவட்டங்கள் பயனடையும் வகையில் கூடுதலாக இரண்டு ரயில் பாதை திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves two additional rail line projects benefiting seven districts in Jharkhand, Karnataka and Andhra Pradesh


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, ரயில்வே அமைச்சகத்தின் மொத்தம் ரூ. 6,405 கோடி மதிப்பிலான இரண்டு கூடுதல் ரயில் பாதை திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
1. கோடெர்மா - பர்கானா இரட்டைப் பாதைத் திட்டம் (133 கி.மீ.) – ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி உற்பத்தி செய்யும் சுரங்கப் பகுதி வழியாக செல்லும் ரயில் பாதை மற்றும் பாட்னா - ராஞ்சி இடையே மிகக் குறுகிய ரயில் இணைப்புப் பாதையாக செயல்படுத்தப்பட உள்ளது.
2. பல்லாரி - சிக்ஜாஜூர் இரட்டைப் பாதைத் திட்டம் (185 கி.மீ.) இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் ரயில் பாதை கர்நாடகா மாநிலம் பல்லாரி, சித்ரதுர்கா மாவட்டங்கள், ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டம் வழியாக செல்கிறது.
இந்த இரண்டு திட்டங்களும் ரயில் வழித்தடத்தை கணிசமாக அதிகரிக்க உதவுகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel