பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, ரயில்வே அமைச்சகத்தின் மொத்தம் ரூ. 6,405 கோடி மதிப்பிலான இரண்டு கூடுதல் ரயில் பாதை திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
1. கோடெர்மா - பர்கானா இரட்டைப் பாதைத் திட்டம் (133 கி.மீ.) – ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி உற்பத்தி செய்யும் சுரங்கப் பகுதி வழியாக செல்லும் ரயில் பாதை மற்றும் பாட்னா - ராஞ்சி இடையே மிகக் குறுகிய ரயில் இணைப்புப் பாதையாக செயல்படுத்தப்பட உள்ளது.
2. பல்லாரி - சிக்ஜாஜூர் இரட்டைப் பாதைத் திட்டம் (185 கி.மீ.) இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் ரயில் பாதை கர்நாடகா மாநிலம் பல்லாரி, சித்ரதுர்கா மாவட்டங்கள், ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டம் வழியாக செல்கிறது.
இந்த இரண்டு திட்டங்களும் ரயில் வழித்தடத்தை கணிசமாக அதிகரிக்க உதவுகிறது.
0 Comments