தமிழ்நாட்டில் 8 இடங்களில் புதிதாக சிறிய துறைமுகங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. செங்கல்பட்டு (முகையூர், பனையூர்), விழுப்புரம் (மரக்காணம்), கடலூர் (சிலம்பிமங்கலம்) துறைமுகம் அமைக்க திட்டம். மயிலாடுதுறை (வானகிரி), நாகை (விழுந்தமாவடி), தூத்துக்குடி (மனப்பாடு), குமரி கடற்கரை பகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது.
துறைமுகங்களை உருவாக்க தனியார் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விருப்பம் தெரிவிக்கும் முதலீட்டாளர்களுக்கு தொழில் கொள்கையின் அடிப்படையில் பல்வேறு அனுமதிகள் வழங்கப்படும். 30 வருடம் முதல் 99 வருடம் வரை நீண்ட காலத்திற்கு குத்தகைக்கு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
0 Comments