Recent Post

6/recent/ticker-posts

வேளாண் துறையில் ₹35,440 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் இரண்டு முக்கிய திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் / Prime Minister Shri Narendra Modi launched two major schemes worth ₹35,440 crore in the agriculture sector

வேளாண் துறையில் ₹35,440 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் இரண்டு முக்கிய திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் / Prime Minister Shri Narendra Modi launched two major schemes worth ₹35,440 crore in the agriculture sector

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (11.10.2025) புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற சிறப்பு வேளாண் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பொது நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பு பிரதமர் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

பிரதமர் விவசாயத் துறையில் ₹35,440 கோடி செலவிலான இரண்டு முக்கிய திட்டங்களைத் தொடங்கி வைத்தார். ₹24,000 கோடி செலவில் பிரதமரின் தன தானிய வேளாண் திட்டத்தை (தன் தான்ய கிரிஷி) அவர் தொடங்கி வைத்தார்.

₹11,440 கோடி செலவில் செல்படுத்தப்படும் பருப்பு வகைகளில் தற்சார்பு அடைவதற்கான இயக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்வளம், உணவு பதப்படுத்தும் துறைகளில் ₹ 5,450 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அதே நேரத்தில் சுமார் ₹ 815 கோடி மதிப்பிலான கூடுதல் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel