2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி, தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தப் போட்டியில், பல்வேறு நாடுகளிலிருந்து அழகி பட்டம் வென்றவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த 25 வயதான ஃபாத்திமா போஷ் இன்று (நவ. 21) 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு மகுடம் சூட்டப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, 2 ஆவது இடத்தை தாய்லாந்தின் பிரவீனார் சிங் என்பவரும், 3 ஆவது இடத்தை வெனிசுலாவின் ஸ்டெஃபானி அப்சாலி என்பவரும், 4 ஆவது இடத்தை பிலிப்பின்ஸின் மா அஹ்திசா மனாலோ என்பவரும் பிடித்துள்ளனர்.


0 Comments