Recent Post

6/recent/ticker-posts

விலையில்லா மடிக்கணினி வழங்க ஹெச்.பி, டெல், ஏசர் ஆகிய நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம் / Tamil Nadu government signs agreement with HP, Dell, Acer to provide free laptops

விலையில்லா மடிக்கணினி வழங்க ஹெச்.பி, டெல், ஏசர் ஆகிய நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம் / Tamil Nadu government signs agreement with HP, Dell, Acer to provide free laptops

தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், தமிழகத்தில் பல்வேறு கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் உயர் தொழில்நுட்ப சாதனங்களை வழங்க திட்டமிடப்பட்டு, முதல்கட்டமாக அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் கைக்கணினி (டேப்லெட்) அல்லது மடிக்கணினி (லேப்டாப்) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக முதல்கட்டமாக நடப்பாண்டில் ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தின்கீழ் ஒரு மடிக்கணினியை ரூ.21,650-க்கு தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்கிறது.

முதற்கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்வதற்கு ஹெச்.பி, டெல், ஏசர் ஆகிய 3 நிறுவனங்களுக்கு பணி ஆணை வழங்கிய எல்காட் நிறுவனம். மார்ச் மாத இறுதிக்குள் மடிக்கணினி விநியோகம் செய்யும் பணியினை முழுமையாக முடிக்க திட்டமிட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel