மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் தொழில்நுட்ப நிறுவனமான தொலைத்தொடர்பு மையம் தில்லி இந்திரபிரஸ்தா தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
தொலைத்தொடர்பு குறித்த ஆராய்ச்சிப் பணிகள் மற்றும் நவீன தொலைத் தொடர்பு தொழில்நுட்பத்தில் பங்களிப்பது மற்றும் சர்வதேச தரநிலைகளுக்கான நடவடிக்கைகள் தொடர்பாக இவ்விரு நிறுவனங்களும் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ள இது வகை செய்கிறது.
ஆப்டிகல் தகவல் தொடர்பு 6ஜி மொபைல் சேவை என்ற நவீன தொழில்நுட்பங்கள் இணையதளம் வாயிலான சேவைகள், தொலைத்தொடர்புத் துறையில் ஆராய்ச்சிப் பணிகளில் பரிசோதனை கட்டமைப்பு மற்றும் குறிப்பிட்ட தரநிலைகளை வடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


0 Comments