Recent Post

6/recent/ticker-posts

திருவனந்தபுரம் - தாம்பரம் உள்பட 3 அம்ருத் பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் / Prime Minister Narendra Modi flags off 3 Amrit Bharat trains, including Thiruvananthapuram - Tambaram

திருவனந்தபுரம் - தாம்பரம் உள்பட 3 அம்ருத் பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் / Prime Minister Narendra Modi flags off 3 Amrit Bharat trains, including Thiruvananthapuram - Tambaram

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார், முடிவுற்ற பணிகளை தொடக்கிவைத்தார்.

இதனைத் தொடா்ந்து திருவனந்தபுரம் நவீன அஞ்சலகத்தையும் அவர் திறந்துவைத்தார். இந்த நிகழ்வில், நாகர்கோவில் - மங்களூரு, திருவனந்தபுரம்-தாம்பரம், திருவனந்தபுரம் - சர்லப்பள்ளி இடையே இயக்கப்படும் 3 அம்ருத் பாரத் ரயில் சேவைகளையும், திருச்சூர் - குருவாயூர் இடையே இயக்கப்படும் புதிய பயணிகள் ரயில் சேவையையும் தொடக்கிவைத்தார்.

இந்த நிகழ்வில் கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதல்வர் பினராயி விஜயன், மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel