ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையே நடக்கும் இந்த ஆஃப்கோன் கோப்பையின் இறுதிப் போட்டி கடந்த ஜனவரி 18ஆம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் செனகல் 1-0 என மொராக்கோவை வென்றது.
இந்தப் போட்டியில் ஸ்டாப்பேஜ் நேரத்துக்குப் பிறகு மொராக்கோ அணிக்கு பெனால்டி வழக்கியதால் செனகல் அணியினர் ஆடுகளத்தை விட்டு வெளியேறினர்.
பின்னர், செனகல் அணி கேப்டன் அவர்களை சமாதானப்படுத்தி களத்திற்கு அழைத்து வந்தார். பெனால்டியில் கோல் அடிக்க மொராக்கோ அணியினர் தவறியதால், 1-0 என செனகல் அணி வெற்றி பெற்றது. கோப்பைகளுடன் செனகல் அணியினரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஆப்பிரிக்க கூட்டமைப்பு அளித்த அறிக்கையில் செனகலிடம் இருந்து கோப்பையை மொராக்கோ அணிக்கு தர வேண்டும் எனக் கூறியுள்ளது. இந்தத் தீர்ப்புக்கு செனகல் அணியினர் கடும் அதிருப்தி அடைந்தனர்.


0 Comments